Home » Entries posted by Shankar U (Page 614)
Entries posted by Shankar

ஆந்திர மாநிலத்தில் மொபைலில் இருந்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்!

Comments Off on ஆந்திர மாநிலத்தில் மொபைலில் இருந்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்!

ஆந்திரா பிரதேச மாநிலத்தில் மொபைல் மூலம் காவல்துறையிடம் புகார் அளிக்க புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயலியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி துவங்கி வைத்தார். அந்த செயலிக்கு “ஏபி போலீஸ் சேவா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் மக்கள் தங்களின் புகார்களை இந்த செயலி கொண்டு பதிவு செய்யலாம். முதல் தகவல் அறிக்கை, இ-சலான், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஆகிய விவரங்களை பற்றிய நிலையை அறிந்து கொள்ளலாம். சாலை விபத்து ஏற்பட்டால் அதை பற்றி தகவலை […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 60 பேர் பலியாகியுள்ளனர், 5,206 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,41,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,811 பேர் பலியாகியுள்ளனர், 4,86,479 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,55,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

இரண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: இந்திய விவசாய வரலாற்றில் முக்கிய தருணம் – பிரதமர் மோடி!

Comments Off on இரண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: இந்திய விவசாய வரலாற்றில் முக்கிய தருணம் – பிரதமர் மோடி!

பாராளுமன்றத்தில் இரண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றபட்டதால் இந்திய விவசாயத்துறையில் பெரும் திருப்பம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதை பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில்; இந்திய விவசாய வரலாற்றில் ஒரு நீர்நிலையான தருணம். பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதிற்கு எங்கள் கடின உழைப்பாளியான விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள். இது விவசாயத்துறையின் முழுமையான மாற்றத்தை உறுதி செய்வதோடு கோடி விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும். பல தசாப்தங்களாக, இந்திய விவசாயிகள் பல்வேறு தடைகளால் பிணைக்கப்பட்டு இடைத்தரகர்களால் கொடுமைப்படுத்தப்பட்டனார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்கள் […]

Continue reading …

தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்!

Comments Off on தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்!

தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலாக உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதை பற்றி பேசிய அமைச்சர் கூறியது; தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தும் வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு தீங்கான சட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வேளாண் மசோதாவினால் விவசாயிகளுக்கு தீங்கு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

Continue reading …

நடிகை சாயிஷாவின் அசத்தலான டான்ஸ் – வைரல் வீடியோ!

Comments Off on நடிகை சாயிஷாவின் அசத்தலான டான்ஸ் – வைரல் வீடியோ!

வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பின்பு காப்பான், கஜினிகாந்த் உள்பட படத்தில் நடித்து உள்ளார். இதை அடுத்து நடிகர் ஆர்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். சாயிஷா படங்கள் மட்டுமில்லாமல் நடனத்தில் பட்டைய கிளம்புவார். அவர் சிறப்பாகவும் மற்றும் அசத்தலாகவும் நடனம் ஆடுவர். தற்போது இருக்கும் கதாநாயகிகளில் சாயிஷா சிறந்த டான்சர் எனவும் கூறலாம். சாயிஷா அவ்வப்போ சமூகவலைதள பக்கத்தில் பல அசத்தலான டான்ஸ் விடியோவை வெளியிட்டு வருவார். தற்போது சாயிஷா […]

Continue reading …

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 94,612 போ் குணம்; விகிதம் 79.7 சதவீதமாக அதிகரிப்பு!

Comments Off on இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 94,612 போ் குணம்; விகிதம் 79.7 சதவீதமாக அதிகரிப்பு!

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 94,612 போ் குணமடைந்துள்ளனர். இதன் விகிதம் 79.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 54,00,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 86,752 பேர் உயிரிழந்துள்ளனர், 43,03,043 குணமடைந்துள்ளனர். மேலும், 10,10,824 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 79.7 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு […]

Continue reading …

ஐபிலில் 100 போட்டிகளை வென்று தல டோனி புதிய சாதனை – குஷியில் ரசிகர்கள்!

Comments Off on ஐபிலில் 100 போட்டிகளை வென்று தல டோனி புதிய சாதனை – குஷியில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2020 நேற்று துவங்கியது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ். டோனி 100 போட்டிகளை வென்று புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. […]

Continue reading …

மிஷ்கினின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

Comments Off on மிஷ்கினின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தெரிவித்த படி இன்று அதிகாலை 12 மணிக்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குனர் மிஷ்கின் அடுத்து “பிசாசு 2” இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் […]

Continue reading …

கொரோனா பாதிப்பு பற்றி செப்.23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Comments Off on கொரோனா பாதிப்பு பற்றி செப்.23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

தமிழ்நாடு உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் ஏழு மாநில முதலமைச்சர்களுடன் செப்டம்பர் 23ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திகிறார். இந்தியாவில் பரல்கள் அதிகமாக உள்ள சமயத்தில் அதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. தற்போது. தற்போது தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதில் டெல்லி மகாராஷ்டிரா ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது. கடந்த 24 […]

Continue reading …

தனி ஒருவராக மூன்று கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி; ட்ராக்டர் பரிசாக அளித்த ஆனந்த் மகிந்திரா!

Comments Off on தனி ஒருவராக மூன்று கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி; ட்ராக்டர் பரிசாக அளித்த ஆனந்த் மகிந்திரா!

பீகாரில் தனி ஒருவராக மூன்று கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயிக்கு ட்ராக்டர் பரிசாக அளித்தார் ஆனந்த் மகிந்திரா. பீகாரில் உள்ள கயா மாவட்டத்தை சேர்ந்தவர் லாங்கி புய்யன். இவர் விவசாயி ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது ஒரு அற்புதமான ஒரு செய்யலை செய்துள்ளார். மலை பகுதியில் இருந்து மழை நீர் குளத்துக்கு வரும் விதமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு தனி ஒருவராக கால்வாய் வெட்டி உள்ளார். அந்த விவசாயி 30 வருடங்களாக தனி […]

Continue reading …