இந்தியா முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதற்கான முன்பதிவு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் துவங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இந்தியா முழுவதும் 230 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், பயணிகள் அதிகமாக காத்திருப்பதால் சிறப்பு ரயில் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. சிறப்பு […]
Continue reading …நடிகர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் வெளியாக உள்ளது. இந்த பிக் பாஸ் நான்காவது சீசனின் நிகழ்ச்சி அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என தகவல் கூறப்படுகிறது. இந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை விஜய் டிவி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் கமலஹாசன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சி பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 1.53 […]
Continue reading …இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியின் அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. கடந்த வாரம் […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 61 பேர் பலியாகியுள்ளனர், 5,859 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,57,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,748 பேர் பலியாகியுள்ளனர்,3,98,366 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,40,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி 2021ஆம் ஆண்டு பாதிவரை கிடைக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோன வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அதிக அளவில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை அழிக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமான இறங்கியுள்ளது. ஆனால், இதுவரை தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் எதுவும் 50 சதவீதம் கூட நல்ல பலன் கொடுக்கவில்லை […]
Continue reading …அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் இடையூறு சீனா திட்டமிட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள். இரு கட்சினரும் தீவிரமாக […]
Continue reading …சீனா எல்லையில் எந்த விதமான சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக லடாக் சென்ற ராணுவ தளபதி நரவானே, லே நகரில் இருக்கும் ராணுவ முகாமில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் தயார் நிலை பற்றியும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதன் பின்பு நிருபர்களிடம் பேசிய தளபதி நரவானே; சீனா நாட்டின் […]
Continue reading …ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில்; நல்லாசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டிய தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை செப்டம்பர் 5ம் தேதி நம் தேசத்தில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அவ்வகையில் சமூகத்திற்கு கல்வியை வழங்கும் ஆசிரியர்களை ஒப்பந்த நிலையில் வைத்து போற்றி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கை […]
Continue reading …ஆசிரியர் நாளில் நமது ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம் என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை குறித்து அவருடைய ட்விட்டர் பதிவில்: ஆசிரியர் தின வாழ்த்துக்கள்: மனதை வடிவமைப்பதற்கும் நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கும், பங்களிப்புகளுக்கும், கடின உழைப்பாளிக்கும், ஆசிரியர்களுக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ஆசிரியர் தினத்தன்று, நமது ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுடன் நமக்கு உள்ள தொடர்பை மேலும் வலுப்படுத்த, நமது […]
Continue reading …மதுரையில் கப்பலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வைத்திருக்கும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பது பற்றி அமைச்சர் உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; முதல் ஊரடங்கு உத்தரவின் போது தளர்வு தரப்பட்டு, தானியங்களை சேமித்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பின்னர் 28 லட்சம் கூடுதல் மெட்ரிக் டன் நெல் கொரோனா சமயத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா பாதிப்பால் வேலைவாய்ப்பின்மை […]
Continue reading …