Home » Entries posted by Shankar U (Page 639)
Entries posted by Shankar

இந்தியாவில் இதுவரை 1.77 கோடிக்கும் மேல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது – ஐ.சி.எம்.ஆர் தகவல்!

Comments Off on இந்தியாவில் இதுவரை 1.77 கோடிக்கும் மேல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது – ஐ.சி.எம்.ஆர் தகவல்!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 855 கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதை பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இன்று வெளியிட்ட ட்விட்டரில் பதிவில்: இந்தியா முழுவதும் நேற்று 4 லட்சத்து 8 ஆயிரத்து 855 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 77 லட்சத்து 43 ஆயிரத்து 740 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 6,426 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 6,426 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 82 பேர் பலியாகியுள்ளனர், 5,927 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,34,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,741 பேர் பலியாகியுள்ளனர், 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 97,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 5,309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவையில் ஐந்து தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு!

Comments Off on சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவையில் ஐந்து தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு!

கொரோனா பரவல் இடையே சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் பின்பு பிரதமர் லீ சியென் லூங் சென்ற வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவையை அறிவித்தார். இந்த அமைச்சரவையில் 37 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் ஒன்பது பெண்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் பிரதமராகவும் மற்றும் துணைப் பிரதமராகவும் ஹெங் சுவீ கியெட் பதவியேற்றனர். மேலும், அந்த 37 […]

Continue reading …

ஆளுநர் மாளிகையில் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

Comments Off on ஆளுநர் மாளிகையில் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே ஏழு நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார். இதை மருத்துவர்களின் அறிவுரை படி ஆளுநர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Continue reading …

கவியுடன் லிப்ட் படத்தில் இணைந்த காயத்ரி ரெட்டி!

Comments Off on கவியுடன் லிப்ட் படத்தில் இணைந்த காயத்ரி ரெட்டி!

டிவி சீரியல்களில் நடித்து பின்பு பிக்பாஸ் சீசன் 3 யில் மிகவும் பிரபலமானார் கவின். இவர் தற்போது லிப்ட் என்கிற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினித் வரப்பிரசாதம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி இணைந்துள்ளார். இதனைப்பற்றி காயத்ரி ரெட்டி கூறியது: இந்த படம் பல சிறப்பான […]

Continue reading …

கொரோனா இருப்பது தெரிந்தும் திடீர் தலைமறைவான சூர்யா தேவி; மேலும் இரண்டு பிரிவில் வழக்குப் பதிவு!

Comments Off on கொரோனா இருப்பது தெரிந்தும் திடீர் தலைமறைவான சூர்யா தேவி; மேலும் இரண்டு பிரிவில் வழக்குப் பதிவு!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அந்த வகையில் சூர்யா தேவி என்கிற பெண் யூடியூப் சேனலில் அவர்களைப் பற்றி விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து சூர்யா தேவி மீது வடபழனி காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் பிரிவில் நடிகை வனிதா விஜயகுமார் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் […]

Continue reading …

நடிகை வனிதா விஜயகுமார் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு – இது தான் காரணமாக!

Comments Off on நடிகை வனிதா விஜயகுமார் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு – இது தான் காரணமாக!

நடிகை வனிதா விஜயகுமார் மீது சென்னை போரூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நடிகை வனிதா விஜயகுமார் மீது ஐயப்பன் தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பு பொதுச் செயலாளர் நிஷா தோட்டா புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறை நடிகை வனிதா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை விட அதிகமாக ஆட்கள் கூடியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 6,972 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 6,972 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 4,707 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,27,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,659 பலியாகியுள்ளனர், 1,66,956 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று கொண்டு தான் கேளம்பாக்கம் சென்றிருக்கிறார் – சென்னை ஆணையர் பிரகாஷ்!

Comments Off on சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று கொண்டு தான் கேளம்பாக்கம் சென்றிருக்கிறார் – சென்னை ஆணையர் பிரகாஷ்!

கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அந்த சமயத்தில் ஜூன் 26ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்ற ரஜினி, சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் அபராதம் கட்டிருப்பது தெரியவந்தது. இந்த பயணத்தால் நடிகர் ரஜினிகாந்த இ-பாஸ் பெற்றாரா என்கிற கேள்விகள் எழுந்தது. ஆனால், […]

Continue reading …

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் முக்கியமான அப்டேட்; உறுதி செய்த இயக்குனர் – மாரிசெல்வராஜ்!

Comments Off on தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் முக்கியமான அப்டேட்; உறுதி செய்த இயக்குனர் – மாரிசெல்வராஜ்!

நடிகர் தனுஷ் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு படங்களை நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் பிரமோஷன் வேலைகள் முடிவடைந்து ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் திறக்கப்படாமல் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களும் திரையரங்கு திறந்த பின்னர் ரிலீஸாகும் என கூற எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் ஐந்து படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து துவங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Continue reading …