துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சகோதரர்களும் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தின் தலைவருமான ஓ ராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்று அவருடைய கார் டிரைவர் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது.
Continue reading …அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி கொடுத்தது. இதனை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைகள் சென்ற பிப்ரவரி மாதம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இதன் பின்னர் மார்ச் மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மேலும் மே மாதம் இறுதியில் […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 லட்சம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா டெல்லி தமிழ்நாடு குஜராத் ஆகிய மாநிலங்களில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதியதாக 150 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனவல் பாதிக்கப்பட்ட […]
Continue reading …தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரத்துக்கு அதிகமான உயிரிழந்துள்ளனர். அதிலும் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இந்த வைரஸால் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே எஸ் மஸ்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் […]
Continue reading …விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிப்படைந்த 18 மாத ஆண் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழப்பு. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கும் நீர்பெருந்தகரம் என்ற கிராமத்தில் பழனி என்பவரின் 18 மாத ஆண் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு 26.06.2020 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த குழந்தை நேற்றிரவு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டது. இறந்த குழந்தைக்கு […]
Continue reading …1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இதற்கு முன்பு இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட வனிதா அவர்களுடன் எற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் விவாகரத்து பெற்று கொண்டார். இவருடைய தந்தையான விஜயகுமாருடன் சண்டை ஏற்பட்டதால் இரண்டு மகளுடன் தனியாக வசித்து வருகிறார். தற்போது பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனரை நேற்று கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் சென்னை போரூரில் உள்ள வனிதா […]
Continue reading …தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான காலிஸ்தானை சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை துப்பாக்கியுடன் காவல்துறை கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்ற காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் டெல்லியில் உள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காண்டாநாலா பகுதியில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது மொஹிந்தர் பால்சிங், குர்தேஜ் சிங் மற்றும் லாவ் பிரித் ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்து உள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து மூன்று கைத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் […]
Continue reading …மதுரையில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மன நல மருத்துவர்களை மூலம் ஆலோசனை வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அந்தக் கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: கொரோனா வைரஸ் தான் நம்முடைய எதிரி அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அல்ல. கொரோனாவை […]
Continue reading …இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிய மத்திய அமைச்சர் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூறியது: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில் மூன்று லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் இறப்பவர்கள் விகிதம் 3 சதவீதமாக உள்ளது அதும் இந்தியாவில் குறைவாக உள்ளது. கொரோனாவில் குணமடைவோர் விகிதம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது. […]
Continue reading …பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 860 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்துக்கு மேல் உள்ளது. பின்னர் ஒரே நாளில் 990 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோன வைரசால் […]
Continue reading …