Home » Entries posted by Shankar U (Page 664)
Entries posted by Shankar

கொரோனாவில் இருந்து தப்பிக்க மூடநம்பிக்கை சடங்கு – நாக்கை இழந்த சிறுமி!

Comments Off on கொரோனாவில் இருந்து தப்பிக்க மூடநம்பிக்கை சடங்கு – நாக்கை இழந்த சிறுமி!

கொரோனாவில் இருந்து தப்பிக்க மூடநம்பிக்கை சடங்கு – நாக்கை இழந்த சிறுமி! உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க என்று சொல்லி சிறுமி ஒருவரின் நாக்கைத் துண்டித்து காணிக்கையாக்கியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புண்டேல்கண்ட் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் கொரோனா பாதிப்பை போக்குவதற்காக கொடூரமான மூட நம்பிக்கை ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அங்குள்ள சிவ்ஜி கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் […]

Continue reading …

மக்கள் அனைவரும் மூன்று அடுக்கு கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டு!

Comments Off on மக்கள் அனைவரும் மூன்று அடுக்கு கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டு!

சினாவில் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை எற்படுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,பிரேசில், ஸ்பெயின், இந்தியா போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 70லட்சத்துக்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது பற்றி உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. புதிய ஆராய்ச்சியின் பேரில் முகக்கவசத்தில் மூன்று அடுக்குகள் கொண்டிருக்க வேண்டும். 60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் அல்லது […]

Continue reading …

யானையை அடுத்து பசுவிற்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் – சமூக வளைத்தளத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Comments Off on யானையை அடுத்து பசுவிற்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் – சமூக வளைத்தளத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

கேரளாவில் பசிக்காக உணவை தேடி வந்த யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிகுண்டு வைத்து கொடுத்தில் யானை இறந்துவிட்டது. இந்த சம்பவத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் இமாச்சலபிரதேசத்தில் ஒரு பசுவிற்கு உணவில் வெடிகுண்டு வைத்து கொடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு சமூக வளைத்தளத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள். இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜன்துட்டா பகுதியில் கோதுமை மாவில் வெடிகுண்டை வைத்து உருட்டி கொடுத்ததில் பசுவின் வாய் வெடித்து சிதைந்தது. பக்கத்துக்கு வீட்டுகாரரின் பயிரில் பசு மேய்ந்ததால் இதனை செய்தனர் […]

Continue reading …

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Comments Off on காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவரவாதிகளும் நடைபெற்ற மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சிஆர்பிஎப், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிறப்பு அதிரடி வீரர்கள் ஒன்றிணைந்த தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால், ரேபன் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மற்றும் தீவிரவாதிகளுடன் நடந்த தீவிரமான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

Continue reading …

சீனாவுக்கு எதிராக ஒன்றிணைந்த எட்டு நாடுகள் – என்ன காரணம்?

Comments Off on சீனாவுக்கு எதிராக ஒன்றிணைந்த எட்டு நாடுகள் – என்ன காரணம்?

மனித உரிமைகளுக்கும், உலகப் வியாபாரத்திற்கு சீனா எதிராக இருக்கிறது என குற்றம்சாட்டி எட்டு நாடுகளின் எம்.பிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். நியூ இன்டர் பார்லிமென்ட்ரி அல்லயன்ஸ் என்கின்ற அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், நார்வே என்ற எட்டு நாடுகளும் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்.பிகள் ஒன்றிணைந்து சீனாவுக்கு எதிராக செய்யப்பட போகிறார்கள் என தெரிவித்தனர். மேலும், ஹாங்காங் பிரச்சனையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட தேவையில்லை என சீனா கூறியுள்ளது. சினாவின் […]

Continue reading …

நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்- என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

Comments Off on நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்- என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதிக்குப் பின் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு 2 மாதங்களுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இதனால் ஹோட்டல் தொழிலில் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு உருவானது. ஆனால் பார்சல்கள் வாங்கிக் கொள்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை […]

Continue reading …

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- இந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி!

Comments Off on 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- இந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- இந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி! ஜூன் 15 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் அது சம்மந்தமான வழிகாட்டல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனாவை முன்னிட்டு தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் தமிழக அரசு அதை […]

Continue reading …

ரூபாய் 7,500 கோடி வருமானம் எட்டிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை!

Comments Off on ரூபாய் 7,500 கோடி வருமானம் எட்டிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை!

போர்ச்சுகல் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார். பிரபலங்களின் வருமான பட்டியலை வெளியிடும் போர்பஸ் பத்திரிக்கையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை குறிப்பிட்டுள்ளது. அதில் 1 பில்லியன் டாலர் (ரூபாய் 7554 கோடி) வருமானம் எட்டிய மூன்றாவது கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு டைகர் வுட்ஸ் மற்றும் மேவெதர் ஆகிய வீரர்கள் 1 பில்லியன் டாலர் வருமானத்தை அடைந்துள்ளனர். இதனை பற்றி கூறிய போர்பஸ் பத்திரிகை கூறியது: […]

Continue reading …

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

Comments Off on இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹப்னாபுஜோரூரில் உள்ள ஒரு இல்லத்தில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடி குண்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை கிடைத்ததும் விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் அந்த வெடிகுண்டை கைப்பற்றினர். பின்பு அந்த வெடிகுண்டை பரிசோதனை செய்ததில் தற்போது அது வெடிக்கும் நிலையில் உள்ளன என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து அந்த குண்டை பாதுகாப்பான இடத்திற்கு சென்று அழிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் வேறு எந்த […]

Continue reading …

மூன்று நீதிபதிகளுக்குக் கொரோனா ! வழக்கு விசாரணை மீண்டும் வீடுகளில் இருந்து…

Comments Off on மூன்று நீதிபதிகளுக்குக் கொரோனா ! வழக்கு விசாரணை மீண்டும் வீடுகளில் இருந்து…

மூன்று நீதிபதிகளுக்குக் கொரோனா ! வழக்கு விசாரணையில் மீண்டும் வீடுகளில் இருந்து… சென்னையில் நீதிமன்றம் வந்து வழக்கு விசாரணையில் ஈடுபட்ட மூன்று நீதிபதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊரடங்கு தளர்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றங்களுக்கு வந்து வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் முன் வந்தார்கள். ஆனாலும் விசாரணை அரங்கில் நடக்காமல்,  நீதிபதிகளின் அறைகளிலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் சென்னை நீதிமன்றங்களில் 3 நீதிபதிகள், […]

Continue reading …