
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட 200க்கும் மேலானோரை சிறிய விமானம் கொண்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஃப்ரெஸ்னோ, சான் பெர்னார்டினோ மற்றும் சான் டியாகோ மாவட்டத்தில் மூன்று பெரிய காட்டுத் தீ எரிந்து கொண்டு வருகிறது. க்ரீக் காட்டு தீயினால் ஃப்ரெஸ்னோவில் 36 ஆயிரத்திற்கும் மேலான ஏக்கர் எரிந்துவிட்டது. பொழுதுபோக்கு தலத்தில் மாமத் நீர்த்தேக்கத்திற்கு அருகே காட்டுத் தீ பரவி வந்ததால், அங்கு இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் காயம் அடைந்த 20க்கும் மேலானோரை மருத்துவமனைக்கு அழைத்து […]
Continue reading …
கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி 2021ஆம் ஆண்டு பாதிவரை கிடைக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோன வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அதிக அளவில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை அழிக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமான இறங்கியுள்ளது. ஆனால், இதுவரை தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் எதுவும் 50 சதவீதம் கூட நல்ல பலன் கொடுக்கவில்லை […]
Continue reading …
அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் இடையூறு சீனா திட்டமிட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள். இரு கட்சினரும் தீவிரமாக […]
Continue reading …
இந்தியா-சீனா இடையே கால்வன் மோதலில் சீனா ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததற்கு ஆதாரமாக அவர்களின் கல்லறை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய – சீனா பாதுகாப்பு படையினர் இடையே உருவான தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதை அடுத்து இந்த தாக்குதலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் பற்றிய விவரத்தை இந்தியா வெளியிட்டது. ஆனால், சீனா உயிரிழந்தோர், காயமடைந்தோர் பற்றிய விவரத்தை தெரிவிக்கவில்லை. இதில் 35க்கும் […]
Continue reading …
அமெரிக்கா மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்துவிட்டார் என துணை அதிபராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா, வாஷிங்டனில் நடந்த விழாவில் பேசிய கமலா ஹாரிஸ், கொரோனா வைரஸை பார்த்து டிரம்ப் பயந்துவிட்டார் எனவும் கொரோனா வைரசால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்யாமல் விட்டுவிட்டு பங்கு சந்தையில் கவனம் செலுத்திகிறார் என தெரிவித்தார். கொரோனா பிரச்னையில் கவனம் செலுத்தினால் அது பங்கு சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் […]
Continue reading …
“பிளாக் பேந்தர்” கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணத்தினால் நேற்று உயிரிழந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் (Chadwick Boseman) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலம் இல்லாமல் உயிரிழந்தார். அவருக்கு 43 வயது ஆகிறது. பிளாக் பேந்தர், 21 பிரிட்ஜஸ், அவஞ்சர்ஸ் இன்பினிடி வார், அவஞ்சர்ஸ் என்ட் கேம், கேப்டன் அமெரிக்கா சிவில் வார் உள்பட படங்களில் நடித்து உள்ளார். சாட்விக் நடித்ததில் பிளாக் பேந்தர், அவஞ்சர்ஸ் […]
Continue reading …
உடல்நிலை காரணத்தினால் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் முதலில் பிரதமராக பதவி ஏற்றார். அதன் பின்பு 2007 ஆம் ஆண்டு உடல்நிலை காரணத்தினால் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்று எட்டு வருடங்கள் பிரதமர் ஆக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஷின்ஷோ அபே இரண்டுமுறை மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்ததால் அவரின் உடல் நிலை […]
Continue reading …
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் வகையில், தென்சீனா கடலில் விமானம் தாங்கி கப்பலை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் கூறப்படுகிறது. தென்சீனா கடலுக்கு சீனா நாடு உரிமை கொண்டாடும் விவகாரத்துக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவிப்பதால் இரண்டு நாடுகளும் இடையே பதற்றம் நிலவும் நிலை இருந்து வருகிறது. தற்போது சீனா கடற்படை பயிற்சியை மேற்கொண்டு இருந்த சமயத்தில், அமெரிக்கா நாட்டின் உளவு பார்க்கும் விமானம், பார்ப்பதற்கு தடைவிதித்த பகுதியில் அனுமதி இல்லாமல் பறந்ததாக சீனா குற்றம்சாட்டியது. […]
Continue reading …
நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த பாகிஸ்தான் கேட்ட தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கு ஜெர்மனி மறுப்பு தெரிவித்துள்ளது. நீர்மூழ்கிக்கப்பல் நீர்மட்டத்தில் தெரியாத அளவு தண்ணீருக்குள் வந்தாலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கடல் பரப்புக்கு வர வேண்டும். ஆனால், Air Independent Propulsion என்கிற தொழில்நுட்பத்தை கொண்டு வாரக்கணக்கில் நீர்மூழ்கி கப்பல்கள் கடல் பரப்புக்கு மேல் கப்பல் வருவதை தடுக்க முடியும் . இதன் மூலம் பல வாரத்துக்கு தண்ணீருக்குள் மறைந்து தாக்கவும் மற்றும் தப்பிவிடவும் முடியும். இதனிடையே இந்த […]
Continue reading …
ஜமைக்காவை சேர்ந்தவர் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட். இவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.58 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். இதன் பின்பு 100, 200 மீட்டர், 4*100 தொடர் ஓட்டம் போன்றவற்றில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். உசைன் ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றார். இவரை உலகின் அதிவேக மனிதர் எனவும் அழைக்கப்படும். 2017ஆம் ஆண்டு உசைன் ஓய்வு பெற்றார். உசைன் போல்ட் சமீபத்தில் தான் 34வது பிறந்த நாளை […]
Continue reading …