
சென்னை,மே 5 கொரோனா வைரஸ் தொற்றால் தூண்டப்பட்ட ஊரடங்கால் பாலைவனம் போன்ற அரவம் இல்லாத நிலையில், ரத்தப்போக்குடன் வெள்ளாடு ஒன்று ஆட்டோவில் சென்னை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது ஒரு அவசர நிலை என்பதை உணர்ந்த டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன் சிகிச்சை மேஜையை தயார் செய்தார். அந்த ஆட்டுக்கு இது முதல் பிரசவம் என்பதுடன் குறைப் பிரசவமாகவும் காணப்பட்டதால், மிகவும் சிக்கலாக இருந்தது என மருத்துவர் நினைவு கூர்ந்தார். குறைமாதக் குட்டியின் தலையும், கழுத்தும் பக்கவாட்டில் […]
Continue reading …
புது டெல்லி,மே 05 கொரரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு தொடர்வதால், மத்திய அரசின் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 59 பணியிடங்களில் வேலை பார்த்து வந்த மொத்தம் 20,054 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். […]
Continue reading …
சென்னை,மே 4 நாம் தொடர்ந்து போலி சித்த வைத்தியர் தணிகாசலம் பற்றிய செய்தியினை ஆதார பூர்வமாக வெளியிட்டு வருகிறோம். கடந்த இரண்டாம் தேதி கூட நம் இணைய தளத்தில் வெளியிட்டோம். நம் செய்தி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கும் சென்றது. இந்த நிலையில் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், கோவிட் -19 எனும் கொரனோ வைரஸ் குறித்து வாட்ஸ் […]
Continue reading …
சென்னை,மே 4 கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கிவருகிறது. மத்திய அரசின் ஊரடங்குஉத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் […]
Continue reading …
சென்னை,மே 4 தமிழக முதல்வருக்கு த.மு.மு.க தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம் அனிபா விடுக்கும் வேண்டுகோள். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களை இந்தியா கொண்டு வர இந்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சிகளில் தமிழக அரசு கவனம் அதிகமாக செலுத்தி அவர்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள், அதை சரியான முறையில் டெல்லியில் இருக்கும் தமிழக பிரதிநிதிகளை வைத்து அவர்களை தமிழகம் கொண்டு […]
Continue reading …
சென்னை,மே 4 தமிழகம், இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் சாலை உட்கட்டமைப்பானது இன்றியமையாததாகும். சாலை உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க பல்வேறு முகமைகளோடு ஆலோசித்து புதுமையான வழிமுறைகளை மாண்புமிகு அம்மா அவர்கள் கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று, செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை – Performance Based Maintenance Contract (PBMC) ஆகும். இதில், ஒப்பந்ததாரர் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சாலைகள் மற்றும் அதில் உள்ள […]
Continue reading …
கோவை,மே 3வே.மாரீஸ்வரன் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி, அரசியல் அதிகார அமைப்பு அதிரடி முடிவு . தாழ்த்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் இருந்து எங்களை விடுதலை செய்ய வேண்டும், அத்துடன் எங்கள் தேவேந்திரகுல சமூகத்திலுள்ள உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து எங்கள் சமூக மக்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என்று ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு வங்கிக்காக எங்கள் தேவேந்திரகுல சமுதாயத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் அதன்பிறகு எங்களை புறக்கணித்து விடுகிறார்கள். அதனால் அரசியல் அதிகார அமைப்பும் […]
Continue reading …
சென்னை,மே 3 “ஊரடங்கு தளர்வுகளில் தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் கொரானாவை எதிர் கொண்டு அதனை வீழ்த்திட மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு சுமார் 40நாட்களை கடந்து போன சூழலில் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், கடைகளுக்கு வாடகை செலுத்த இயலாமலும் அல்லல்பட்டு வருகின்றனர் இந்நிலையில் வரும் 4ம் தேதி முதல் மேலும் இரு […]
Continue reading …
சென்னை, மே 2 நாம் ஏற்கனவே டாக்டர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் தணிகாசலம் ஒரு டுபாக்கூர் டாக்டர் என்பதை ஆதாரபூர்வமாக சொல்லியிருந்தோம். தணிகாசலம் மன நிலை பாதிக்கப்பட்டு விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது காரணம் இதுதான், நான் கொரோனாவை குணப்படுத்துவேன் என சொல்லி சமீபகாலமாக முகநூலில் பேசி அதை தனது கைதடியில் மூலம் யூ டியுபியில் பரப்பி வருகிறார். அவர் ஒரு போலி டாக்டர், அவர் ஒரு மனநோயாளி என்ற விபரம் கூட தெரியாமல் சில நெட்டிசன்கள் […]
Continue reading …
சென்னை, மே 2 மத்திய அரசு, எங்கள் கல்வி மீதும், காவிரி மீதும் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிக்கை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களிடமிருக்கும் கல்வியை கைப்பற்ற வேண்டும் என்பது உலக வரலாற்றில் அறமற்ற முறையில் அத்துமீற நினைக்கும் அதிகார வர்க்கத்தின் முதல் செயல் திட்டம் ஆகும். ஏற்கனவே நாங்கள் நீட் என்கிற எமனுக்கு பத்துக்கும் மேற்பட்ட அறிவும் செறிவும் நிறைந்த எங்கள் […]
Continue reading …