இன்று உடன் சென்னைக்கு 381 வயது; வந்தோரை வாழ வைக்கும் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!

Filed under: சென்னை |

இன்று உடன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு 381 வயதை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்; வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381.

பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும்.

இது நம்ம சென்னை..

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.