Home » Entries posted by Shankar U (Page 632)
Entries posted by Shankar

இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Comments Off on இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

இந்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய சுதந்திரதின நல்வாழ்த்துகள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தி குறிப்பு மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற இந்த பொன்னான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்கள் காட்டிய அகிம்சை வழியில் ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் தாய் திருநாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்திட […]

Continue reading …

அமெரிக்கா நாட்டின் விமானங்கள் ரஷ்யா பகுதிகுள் நுழைந்ததா?

Comments Off on அமெரிக்கா நாட்டின் விமானங்கள் ரஷ்யா பகுதிகுள் நுழைந்ததா?

ரஷ்யா பகுதிகுள் அத்துமீறி இரண்டு அமெரிக்கா விமானங்கள் நுழைந்ததை வெளியேற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை பற்றி வெளியிட்ட செய்தியில், ரஷ்யா எல்லைக்கு உள்ளடங்கிய கருங்கடல் பகுதியில், அமெரிக்கா ராணுவத்தின் போஸிடான் போர் விமானம் மற்றும் RC-135 உளவு விமானங்கள் அத்துமீறி நுழைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த விமானங்களை வழி மறித்து ரஷ்யாவின் ஜெட் விமானம், அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் எல்லை பகுதியை விட்டு வெளியேற்றும் வரை பின் தொடர்ந்து சென்றது என […]

Continue reading …

மிக் 21 பைசன் விமானத்தை ஒட்டி பார்த்து ஆய்வு நடத்தினர் – தளபதி ஆர்கேஎஸ் பதாரியா!

Comments Off on மிக் 21 பைசன் விமானத்தை ஒட்டி பார்த்து ஆய்வு நடத்தினர் – தளபதி ஆர்கேஎஸ் பதாரியா!

இந்திய விமான படையின் தலைமை தளபதி பதாரியா மிக் 21 பைசன் விமானத்தை ஒட்டி பறந்து சென்று ஆய்வு நடத்தியுள்ளார். தளபதி ஆர்கேஎஸ் பதாரியா, இந்திய விமானப் படையின் மேற்குப் பிரிவு முன்களப் பகுதியை ஆய்வு நடத்தினர். இதன் பின் விமானப் படை வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். அந்த சமயத்தில் மிக் 21 பைசன் விமானத்தில் பறந்து சென்று ஆய்வு செய்தார். லடாக் எல்லை சீனா உடன் மோதல் நிலவும் நிலையில், விமானப் படையின் செயல்பாட்டை தெரிவிக்கும் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,835 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,835 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் பலியாகியுள்ளனர், 5,146 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,20,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,397 பேர் பலியாகியுள்ளனர், 2,61,459 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,13,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

இலங்கையில் 25 வயது இளைஞருக்கு அமைச்சரவையில் இடம் – யார் அவர்?

Comments Off on இலங்கையில் 25 வயது இளைஞருக்கு அமைச்சரவையில் இடம் – யார் அவர்?

இலங்கையில் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் சென்ற வாரம் நடந்தது. அந்த தேர்தலில் ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி 225 இடங்களில் 145 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த புதிய நாடாளுமன்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று கண்டியில் நடைபெற்றது. இதில் நிதியின் நகர அபிவிருத்தி மத விவகாரம் நுட்பத்துறை மகிந்த ராஜபக்ச ஏற்று கொண்டார். இதன் பின் கோத்தபய ராஜபக்சவின் மூத்த அண்ணன் சாமல் ராஜபக்சேவிற்கு நீர்பாசனம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை கொடுக்கப்பட்டது. […]

Continue reading …

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் 70.76 சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சகம்!

Comments Off on இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் 70.76 சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சகம்!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணம் அடைந்தோர் வீதமும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 23 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 47 ஆயிரத்துக்கும் மேல் பலியாகியுள்ளனர். இதில் 6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது கொரோனா தொற்றில் இருந்து 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் […]

Continue reading …

தமிழ்நாடு காவலர்கள் 6 பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது – மத்திய உள்துறை அமைச்சகம்!

Comments Off on தமிழ்நாடு காவலர்கள் 6 பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது – மத்திய உள்துறை அமைச்சகம்!

2020ஆம் ஆண்டின் சிறந்த விசாரணைக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதைப் பெறுவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு காவலர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழக காவலர்கள் 6 பேர் உள்பட இந்திய அளவில் 121 காவலர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இந்த விருதை பெறும் ஆறு காவலர்கள் காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் டி.வினோத் குமார் ஆகிய ஆறு பெரும் விருதை பெறுகின்றனர். பின்னர் புதுச்சேரியைச் சேர்ந்த […]

Continue reading …

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம் – சீனா தகவல்!

Comments Off on அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம் – சீனா தகவல்!

அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தல் பற்றி அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டை சீனா என நிராகரிக்கிறது என சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியானிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் தலையிடுவதற்கு முயற்சி செய்வதாக அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் வில்லியம் இவானினா சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இதை பற்றி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிருபர்களிடம் பேசிய சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியது: […]

Continue reading …

பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 கோடி டாலர் கடன் உவியை சவுதி அரேபியா நிறுத்தியது – உயரும் எதிர்ப்புகள்!

Comments Off on பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 கோடி டாலர் கடன் உவியை சவுதி அரேபியா நிறுத்தியது – உயரும் எதிர்ப்புகள்!

பாகிஸ்தானுக்கு கடன் உதவி மற்றும் கச்சா எண்ணெய்யை கொடுத்து வந்த சவுதி அரேபியா, இனிமேல் கொடுக்கப்படாது என தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. இதனால் எதிராக சவுதி அரேபியாவின் ஆதரவை பெற்று வந்த பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா முகுமது குரேஷி கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக பாகிஸ்தானுக்கு கொடுக்கவிருந்த 300 கோடி […]

Continue reading …

தமிழகத்தில் இன்று 5,871 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on தமிழகத்தில் இன்று 5,871 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் பலியாகியுள்ளனர், 5,633 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,14,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,278 பேர் பலியாகியுள்ளனர், 2,56,313 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,12,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …