உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் அதிக பாதிப்பு உள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட காவலர்கள் பலியாகியுள்ளனர் மற்றும் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னராக பகத் சிங் […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,244 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர், 3,617 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,38,470 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,966 பேர் பலியாகியுள்ளனர், 89,532பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 77,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,253பேர் பலியாகியுள்ளனர். மேலும், பிற மாவட்டத்தில் 3,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …நிலத்தகராறு காரணத்தினால் இமயம்குமார் என்பவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் திருப்போரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., இதயவர்மனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கும் மற்றும் இமயம்குமார் என்பவருக்கும் நில தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை இருவருக்கும் இடையே வாக்குவாதமான நிலையில் ஏற்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே எம்எல்ஏ அவருடைய தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இமய குமார் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த துப்பாக்கியால் […]
Continue reading …பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் மற்றும் அவருடைய மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அவருடைய ட்விட்டரில் தெரிவித்தார். அந்த பதிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வருவதற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவருடைய மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் தினதோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்த வைரசால் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 62.78 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Continue reading …சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று பெரும் வெற்றி பெற்றவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். இவர் ஆந்திராவில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் முழுமையான மருத்துவ வசதிகள் கொண்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆரம்பித்து வைத்தார். இதில் நகரி தொகுதி உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ்களை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரோஜா பின்னர் ஒரு […]
Continue reading …பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்கு பத்து தொலைக்காட்சி தயாராக இருப்பதாக என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள தாசப்பகவுண்டன்புதூர் கிராமத்தில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துவதால் மாணவர்களுக்கு கண்பார்வையில் பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கத்தில் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு முகாம்களை அமைத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு […]
Continue reading …சிங்கப்பூரின் பிரதமர் லீ செய்ன் லூங். இவரின் பீப்பிள் ஆக் ஷன் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. இவரின் ஆட்சிக் காலம் முடிய 10 மாதங்கள் உள்ள நிலையில் பிரதமர் லீ செய்ன் முன்பே தேர்தலை அறிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் மீறி தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக வந்த மக்கள் முககவசம், கையுறைகள் ஆகியவற்றை அணிந்து பாதுகாப்பாக வாக்களித்தனர். பிறகு கொரோனா தொற்றின் காரணத்தால் வாக்குச் சாவடிகள் அதிகமாக அமைத்துள்ளனர். காலையில் இருந்து இரவு 8:00 […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 69 பேர் பலியாகியுள்ளனர், 3,591 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,34,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,898 பேர் பலியாகியுள்ளனர், 85,915 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 76,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிற மாவட்டத்தில் 2,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்காவில் உள்ள அமைப்பு கெளரவப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் இருக்கும் The Rotary Foundation of Rotary International என்கிற அமைப்பு முதல்வரை கெளரவப்படுத்தி உள்ளது. அவரின் சேவையைப் பாராட்டி PAUL HARRIS FELLOW என கெளரவப்படுத்தி உள்ளது. குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை பார்த்தார் என கெளரவித்துள்ளது.
Continue reading …