Home » Entries posted by Shankar U (Page 657)
Entries posted by Shankar

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு!

Comments Off on தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தென்னாபிரிக்கா அணி மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணத்தினால் அந்த போட்டிகள் கைவிடப்பட்டது. இதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர்கள் நாடு திரும்பினர். தற்போது தென்னாபிரிக்கா கிரிக்கெட் போர்ட் (சிஎஸ்ஏ) சார்பில் ஒப்பந்த வீரர்கள், பணியாளர்கள் உள்பட 100 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. […]

Continue reading …

கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி!

Comments Off on கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி!

சோங்கிங் ஜிபெய் பயாலஜிகல் புரோடக்ட்ஸ் என்கிற நிறுவனம் கண்டு அறிந்த கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்க்க சீனா அரசு அனுமதி கொடுத்துள்ளது. அன்ஹுய் ஜீஃபி லாங்க்காம் பயோஃபார்மா சூட்டிகல் மற்றும் சீன அறிவியல் அகாடமியின் நுண்ணுயிரியல் துறையும் இந்த கண்டுபிடிப்பில் ஒன்றிணைத்து செய்யபட்டுள்ளது. தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் கொடுக்கப்பதற்கு கிளினிகல் பரிசோதனைக்கு சீனா தேசிய தேசிய மருத்துவ தயாரிப்பு நிர்வாகத்திடம் சான்றிதழைப் பெற்றுள்ளது. இதனை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்ப்பதற்கு ஆறு சோதனை […]

Continue reading …

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா நெகடிவ் வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசியது: கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸை எதிராக போராடுகிறோம். 87 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் இருக்கிறது. இதை கொண்டு இந்தியாவில் அதிகமாக 30,000 பரிசோதனையை செய்ய எட்டியுள்ளோம். இதுவரை 9,19,204 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,358 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் எண்ணிக்கை 34,112 ஆக […]

Continue reading …

ஜெர்மனியில் உள்ள டோனிஸ் இறைச்சி தொழிற்சாலையில் 1331 பேருக்கு கொரோன பாதிப்பு!

Comments Off on ஜெர்மனியில் உள்ள டோனிஸ் இறைச்சி தொழிற்சாலையில் 1331 பேருக்கு கொரோன பாதிப்பு!

ஜெர்மனி நாட்டின் பிரபலமான டோனிஸ் இறைச்சி தொழிற்சாலையில் 1331 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் இறைச்சித் தொழிற்சாலைகளில் அதிகமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தான் வேலை பார்கின்றன்ர். ஆனால், அவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அங்கையே தங்க வைக்கின்றனர். இதனால், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து பலருக்கு பரவ காரணமாக உள்ளது. ஜெர்மனியின் ரீடா வைடன்ப்ரக் (Rheda-Wiedenbruck) பகுதியில் உள்ள டோனிஸ் இறைச்சித் தொழிற்சாலையில் உள்ள சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. தற்போது ஜெர்மனியின் ரீடா வைடன்ப்ரக் […]

Continue reading …

ரஷ்ய நாட்டின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாஸ்கோ புறப்பட்டார் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Comments Off on ரஷ்ய நாட்டின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாஸ்கோ புறப்பட்டார் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷ்யா சென்றுள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை விழித்தி 75ஆம் ஆண்டு வெற்றி விழா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விமானம் மூலம் ரஷ்யா சென்றார். இதில் சீனா நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் வீ பெங்கும் கலந்து கொள்கிறார். இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை அதிகரித்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். […]

Continue reading …

புழல் சிறையில் மேலும் 11 விசாரணை கைதிகள் கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on புழல் சிறையில் மேலும் 11 விசாரணை கைதிகள் கொரோனாவால் பாதிப்பு!

சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் மேலும் 11 விசாரணை கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பே இரண்டு காவலர்கள், பெண் தூய்மைப் பணியாளர், உள்பட 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறையில் கொலை வழக்கில் இருந்த ஒருவர் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காலமானார். பின்பு இவருடன் தொடர்பு இருந்தவர்களுக்கு வைரஸ் பரவி இருக்க வாய்ப்பு என்பதால் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 11 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது […]

Continue reading …

நாளை முதல் 30 ஆம் தேதி வரை மதுரையில் முழு ஊரடங்கு!

Comments Off on நாளை முதல் 30 ஆம் தேதி வரை மதுரையில் முழு ஊரடங்கு!

மதுரையில் நாளை முதலில் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டும் தருவதற்கு அனுமதி […]

Continue reading …

மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம்!

Comments Off on மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம்!

பாகிஸ்தான் நாட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தீவிர முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்திற்கு சென்றுதுள்ளது. அங்கு இருக்கு பயிர்களை அழித்து வருகிறது. பின்னர் பக்கத்தில் இருக்கும் மாவட்டங்களான பிகானீர், ஜலோர், பார்மர், ஜெய்சல்மர் போன்ற மாவட்டங்களுக்கு கூட்டம் செல்லாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலைவன வெற்றிகளை அழிப்பதற்கு உலக வங்கி நிதியுடன் 411 டிராக்டர்களில் […]

Continue reading …

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்!

Comments Off on தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்!

தமிழ்நாட்டில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர்கான இருசக்கர வாகனம், மாற்றுத் திறனாளிக்கான மூன்று சக்கர சைக்கிள், போன்றவற்றை அமைச்சர் காமராஜ் வழங்கியுள்ளார். பின்பு நிருபர்களிடம் பேசினார்: அதில் கூறியது, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 512 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24,70,000 மெட்ரிக் டன் நெல் […]

Continue reading …

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை – பொது சுகாதாரத் துறை தகவல்!

Comments Off on தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை – பொது சுகாதாரத் துறை தகவல்!

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உடல்நிலை பிரச்சனையால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் சண்முகத்தை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என தெரியவில்லை. பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதாகவும் தகவல் கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் சிவி சண்முகத்திற்கு 18ஆம் தேதி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் முடிவுகள் 19ஆம் தேதி வந்துள்ளது. அதில் அவருக்கு […]

Continue reading …