
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும் அதன் குணமடைந்து எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகள் பிளாஸ்மா தானம் அளிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் பிளாஸ்மா தானம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பிளாஸ்மா தானம் செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை கொடுத்த பின்பு குணமடைந்தார். இதனால் அமைச்சர் […]
Continue reading …
லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா சீனா இடையே ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்தியா ராணுவ வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15ஆம் தேதி சீனா அத்துமீறிய போது இரு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் சீனா தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் கூறப்பட்டது. தற்போது வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களை நினைவு கூரும் விதமாக […]
Continue reading …
இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி ராஜ்காட்டில் இருக்கும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார். மேலும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த விஜய் கோட்டில் இருக்கும் சாஸ்திரியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு டெல்லி […]
Continue reading …
இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளும் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்தநாளும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதை குறித்து பிரதமர் பதிவிட்டது; மகாத்மா காந்தியை இந்த நாளில் வணங்குகிறோம். அவரின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்கள் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. வளமான மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் பாபுவின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றது. இதை அடுத்து, […]
Continue reading …
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 63,12,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 98,678 பேர் உயிரிழந்துள்ளனர், 52,73,201 குணமடைந்துள்ளனர். மேலும், 9,40,705 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 83.5 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.6 சதவீதம் குறைவாக உள்ளது. பின்பு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 14.9 சதவீதம் […]
Continue reading …
இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் 75வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் பிரதமர் மோடி வாழ்த்து செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது மிகுந்த நுண்ணறிவுகளும், கொள்கை விஷயங்களை பற்றிய புத்திசாலித்தனமான புரிதலும் நம் தேசத்திற்கு பெரும் சொத்து. பாதிக்கப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகவும் இரக்கமுள்ளவர். அவரது நல்ல […]
Continue reading …
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் வேலை பார்க்கும் 400 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், கோவிலை தற்போது திறக்க வாய்ப்பில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை பற்றி அம்மாநிலத்திலுள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒடிசா அரசு, பூரி ஜெகநாதர் கோவிலின் கருவறையில் அதிகமாக இடவசதி இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், கோவிலை இருந்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த கோவிலில் […]
Continue reading …
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ கிளை அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொச்சி உள்பட ஒன்பது இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய நகரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளைகள் அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது இதை பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு […]
Continue reading …
கடந்த 25ஆம் தேதி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள்,என பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடலை திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவருடைய பண்ணை இல்லத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என ஆந்திர பிரதசம் முதல்வர் […]
Continue reading …
பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தினதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வந்தாலும், குணமைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை குறித்து ட்விட்டர் பதிவில்; நான் கொரோனா […]
Continue reading …