Home » Archives by category » இந்தியா (Page 139)

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் – ஆந்திர முதல்வர் கோரிக்கை!

Comments Off on பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் – ஆந்திர முதல்வர் கோரிக்கை!

கடந்த 25ஆம் தேதி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள்,என பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடலை திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவருடைய பண்ணை இல்லத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என ஆந்திர பிரதசம் முதல்வர் […]

Continue reading …

பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி!

Comments Off on பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி!

பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தினதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வந்தாலும், குணமைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை குறித்து ட்விட்டர் பதிவில்; நான் கொரோனா […]

Continue reading …

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உயிரழப்பு – தலைவர்கள் இரங்கல்!

Comments Off on முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உயிரழப்பு – தலைவர்கள் இரங்கல்!

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் காலமானார். இவருடைய மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து உள்ளனர். 1938ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங். இவர் இந்தியா ராணுவத்தில் அதிகாரியாக வேலை பார்த்தவர். பின்பு பாஜக துவங்கிய காலத்தில் முதல் வாஜ்பாய் […]

Continue reading …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம்!

Comments Off on கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, கடந்த 14ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பின் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை இருந்ததால் லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்பு அந்த மருத்துவமனையில் இருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு நேற்று முன் […]

Continue reading …

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆறு மணி நேரம் தீவிர விசாரணை!

Comments Off on பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆறு மணி நேரம் தீவிர விசாரணை!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்ந்து, பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் பிரச்சனை பெருமளவில் கிளம்பியுள்ளது. போதைப்பொருள் உபயோகப்படுத்தியது மற்றும் அவருடைய காதலர் சுஷாந்த்துக்காக பெற்றது என்ற குற்றங்களின் பேரில் நடிகை ரியா சக்கரவர்த்தி கடந்த 8ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதில் அவருடைய ததம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்ளிட்ட பலரும் கைதாகினர். இதை அடுத்து சில திரைத்துறையினரிடம் போதைப் […]

Continue reading …

அவர் மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும் – பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இரங்கல்!

Comments Off on அவர் மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும் – பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், போன்றோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் பாடகர் எஸ் பி சுப்ரமணியத்தின் மறைவிற்கு அவருடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவரின் டுவிட்டர் பதிவில்; பாடும் நிலா.. பத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பாடல்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பலருக்கு மகிழ்ச்சியளித்தன. […]

Continue reading …

ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண்மணி; பெருமையை பெற்ற சிவாங்கி!

Comments Off on ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண்மணி; பெருமையை பெற்ற சிவாங்கி!

ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் இந்தியா பெண்மணி என்ற பெருமையை சிவாங்கி சிங் பெற்றுள்ளார். இந்திய விமானப்படையில் வேலை பார்ப்பவர் லெஃப்டினண்ட் ஷிவாங்கி சிங். தற்போது இந்தியா விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்ட ரஃபேல் விமானத்தை இயக்கும் முதல் இந்திய பெண்மணி இவர்தான். சிவாங்கி சிங் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் 2017 ஆம் ஆண்டு ஹரியானாவின் அம்பாலா விமானப்படையில் பணியைத் துவங்கினார். தற்போது இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்குவதற்கு 10 பெண் விமானிகளுக்கு […]

Continue reading …

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 253 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 253 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 253 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிராவில் 12 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை எதிர்த்து களத்தில் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் […]

Continue reading …

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் உள்ள பிவண்டி பகுதியில் மூன்று மாடி கட்டிடம் 21ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் விபத்தில் மாட்டி கொண்டனர். இந்த விபத்தை பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு வேலையை மேற்கொண்டனர். முதல் அன்று 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். […]

Continue reading …

நவம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் திறப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்!

Comments Off on நவம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் திறப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்!

நவம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் துவங்கலாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதனை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியது; அக்டோபர் 30ஆம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைகளை முடிக்க வேண்டும் எனவும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு […]

Continue reading …