Home » Archives by category » இந்தியா (Page 151)

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதியதாக 150 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தில் புதியதாக 150 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 லட்சம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா டெல்லி தமிழ்நாடு குஜராத் ஆகிய மாநிலங்களில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதியதாக 150 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனவல் பாதிக்கப்பட்ட […]

Continue reading …

பயங்கரவாத அமைப்பான காலிஸ்தானை சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை காவல்துறை கைது செய்தனர்!

Comments Off on பயங்கரவாத அமைப்பான காலிஸ்தானை சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை காவல்துறை கைது செய்தனர்!

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான காலிஸ்தானை சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை துப்பாக்கியுடன் காவல்துறை கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்ற காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் டெல்லியில் உள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காண்டாநாலா பகுதியில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது மொஹிந்தர் பால்சிங், குர்தேஜ் சிங் மற்றும் லாவ் பிரித் ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்து உள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து மூன்று கைத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் […]

Continue reading …

இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 58 சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

Comments Off on இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 58 சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிய மத்திய அமைச்சர் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூறியது: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில் மூன்று லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் இறப்பவர்கள் விகிதம் 3 சதவீதமாக உள்ளது அதும் இந்தியாவில் குறைவாக உள்ளது. கொரோனாவில் குணமடைவோர் விகிதம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது. […]

Continue reading …

உத்தரபிரதேச அரசு எடுத்த தீவிர முயற்சியால் 85,000 உயிர்களை காப்பாற்ற முடிந்தது – பிரதமர் மோடி!

Comments Off on உத்தரபிரதேச அரசு எடுத்த தீவிர முயற்சியால் 85,000 உயிர்களை காப்பாற்ற முடிந்தது – பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அரசு தீவிரமாக பணிபுரிந்ததால் 85 ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடிந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தற்சார்பு வேலைவாய்ப்பு திட்ட விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியது: இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம். அம்மாநில அரசு தீவிரமாக பணிபுரிந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 85,000 உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார். உலகமே ஒரே சமயத்தில் ஒரு சிக்கலை எதிர் கொண்டு வருகிறது என்பதை எவரும் எதிர்பார்த்ததில்லை […]

Continue reading …

கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் 110 பேர் பலி!

Comments Off on கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் 110 பேர் பலி!

கடந்த இரண்டு நாட்களாக பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் பெய்த கனமழையால் 110 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் பல பேர் வயல் வெளிகளில் பணிபுரிந்ததால் இடிதாக்கி […]

Continue reading …

தனியார் நிறுவனங்கள் இந்திய விண்வெளித்துறையில் இணைவதால் வேலைவாய்ப்பு பெருகும் – இஸ்ரோ சிவன்!

Comments Off on தனியார் நிறுவனங்கள் இந்திய விண்வெளித்துறையில் இணைவதால் வேலைவாய்ப்பு பெருகும் – இஸ்ரோ சிவன்!

இனிமேல் தனியார் நிறுவனங்கள் ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களை தயாரிக்கலாம் என இஸ்ரோ சிவன் கூறியுள்ளார். இஸ்ரோ இணையதளம் கொண்டு பேசிய இஸ்ரோ சிவன் கூறியது: விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு பங்களிப்பிற்கு அனுமதி கொடுக்கும் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என கூறியுள்ளார். பல வருடமாக தனித்தனி பாகங்களை மட்டும் இஸ்ரோவுக்கு கொடுத்து வந்த தனியார் நிறுவனங்கள் தற்போது விண்வெளித்துறையில் இணைவதால் வேலைவாய்ப்பு பெருகும் என சிவன் கூறியுள்ளார்.

Continue reading …

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Comments Off on ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

சோபோர் பகுதியில் இருக்கும் ஹார்ட்சிவா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்ற தகவலை கொண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் தேடும் பணியை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பாதுகாப்புப் படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இரண்டு தரப்பினரும் இடையான துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் எந்த பயங்கரவாத அமைப்பு என்பதை பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Continue reading …

ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!

Comments Off on ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!
ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!

ஜூன் 24 1941-1945 ஆம் ஆண்டு காலத்தில், அப்போதைய சோவியத் மக்களால், போரின் போது கிடைத்த வெற்றியின் எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது. 24 ஜூன் 2020 அன்று மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற, வெற்றி தின அணிவகுப்பில் இந்திய இராணுவப் படையினர் பங்கேற்றனர். அனைத்து அணிகளையும் சேர்ந்த 75 பேர் கொண்ட இந்திய இராணுவப் படையின் முப்படை சேவை பிரிவு, ரஷ்ய இராணுவபடை மற்றும் 17 பிற நாடுகளின் படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரண்டாம் உலகப் போரின்போது, மிகப்பெரிய […]

Continue reading …

ஹரியானா மாநிலத்தில் 2.8 ரிக்டர் அளவில் பூகம்பம்!

Comments Off on ஹரியானா மாநிலத்தில் 2.8 ரிக்டர் அளவில் பூகம்பம்!

ஹரியானா மாநிலத்தில் ரோக்தக் நகரில் இன்று மதியம் 12.58 மணி அளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 2.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது. இதனால் உயிர் சேதங்களை மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சில நாட்களாக இந்தியாவில் வட பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா அகோலா நகரில் நேற்று மாலை 3.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Continue reading …

PMCARES நிதி மூலம் 50,000 வென்டிலேட்டர் கருவிகள் தயாரிப்பு – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!

Comments Off on PMCARES நிதி மூலம் 50,000 வென்டிலேட்டர் கருவிகள் தயாரிப்பு – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!

கொரோனாவுக்காக நாடு மக்களின் சிறப்பு நிதியான PMCARES கொண்டு 50,000 உயிர் காக்கும் கருவியான வென்டிலேட்டரை உள்நாட்டில் தயாரிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட 2,923 வென்டிலேட்டர் கருவிகளில் 1,340 வென்டிலேட்டர் கருவிகள் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பீகார், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைசிகுள் 14,000 வென்டிலேட்டர் கருவிகள் பிற மாநிலத்துக்கும் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் கொடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், PMCARES நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு […]

Continue reading …