
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் குணம் அடைந்து வீடு திரும்பினார் 100 வயது சாந்தாபாய் பாட்டி. கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பவர்கள் அதிகமாக முதியவர்கள் தான். ஆனால், சில நாடுகளில் 90 வயது மேல் உள்ளவர்களும் கொரோனாவை வென்று உள்ளனர். இதைப்போல் மத்தியபிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சாந்தாபாய் என்றால் 100 வயது பாட்டி கொரோனாவை வென்றுள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு, தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ளார். மேலும், வீடு […]
Continue reading …
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 64 சதவீதம் ஆண்கள் மற்றும் 36 சதவீதம் பெண்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைப் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: இந்தியாவில் கொரோனாவால் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதில் 64 சதவீதம் ஆண்களும் 36 சதவீதம் பெண்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் வயசு வித்தியாசத்தில், 15 வயதுக்கு உள்ளவர்கள் 0.5 சதவீதமும், 15 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் 2.5%, 30 வயது முதல் 45 வயதுக்குள் […]
Continue reading …
புது டெல்லி,மே 21 உம்பன் புயல் பாதிப்புக் காட்சிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டர் பதிவுகளில் கூறியதாவது: ”உம்பன் புயல் பாதிப்புகளை துணிவுடன் எதிர்கொண்டதால், எனது எண்ணங்கள் ஒடிசா மக்கள் பற்றியே உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முடிந்த அளவு அனைத்து உதவிகளும் கிடைப்பதை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உறுதி செய்வர். இங்கு நிலைமை […]
Continue reading …
அறிகுறி இல்லாதவர்கள், காய்ச்சல் இல்லாதவர்கள் குறைவான அறிகுறி இருப்பவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறைவான அறிகுறி இருக்கும் நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் போது, அவர்களுக்கு பரிசோதனை செய்ய தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அறிகுறிகள் இருந்த பின்னர் 10 நாட்கள் கழித்து, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் ஏற்படவில்லை எனில் பரிசோதனை செய்யாமல் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்தலும், அவர்களை வீட்டில் ஏழு நாட்கள் தனிமையில் […]
Continue reading …
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு… வழக்கம்போல தமிழகத்துக்கு ஓரவஞ்சனை! மத்திய அரசு மாநிலங்களுக்காக 5002.5 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தொகுப்பை ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசுக்கு அதிகளவில் வருவாய் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து திரும்ப வரும் நிதி மிகவும் கம்மியாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை […]
Continue reading …
மேற்கு வங்காளத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 225 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று கூட தெரியவில்லை. இந்த செய்தி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு என்ன காரணம் என கேள்வி கிளம்பி வந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தை பற்றி ராஜினாமா செய்த கிறிஸ்டெல்லா […]
Continue reading …
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டை தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயன் அடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. இது அனைத்து இந்தியர்களுக்கு பெருமையை அளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த முயற்சி பல உயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். அவர்களின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். மேலும், நான் ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் உரையாடுவேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த […]
Continue reading …
இந்தியக் கைதிகளை விடுதலை செய்த நாடு – 127 பேர் நாடு திரும்பல்! கொரோனா அச்சம் காரணமாக பல நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் 3 மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள அரசுகள் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஜாமீன் மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இந்நிலையில் பஹ்ரைன் […]
Continue reading …
இந்தியாவில் மத்திய அரசால் விதிக்கப்பட்ட கடும் ஊரடங்கு உத்தரவால் பின்பற்றியதால் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 64 நாள் தேவைப்பட்டுள்ளது. பிறகு மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வைரஸ் பரவுவது குறைவாக தான் உள்ளது. இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100ரில் இருந்து ஒரு லட்சத்தைத் எட்டுவதற்கு 64 நாள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் 25 நாட்கள், இத்தாலியில் 36 நாட்கள், பிரிட்டனில் 42 நாட்கள் பிரேசிலில் 39 […]
Continue reading …
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று காலை 11.00 மணிக்கு, விடுத்துள்ள புயல் எச்சரிக்கை, மேற்குவங்க கடலில் மையம் கொண்டள்ள உம்-பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா) வுக்கு 480 கீ.மீ தொலைவிலும், தெற்கு – தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 630 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென் – மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 750 கி.மீ தொலைவிலும் இன்று […]
Continue reading …