Home » Entries posted by Shankar U (Page 605)
Entries posted by Shankar

மகாராஷ்டிரா மாநிலத்தை முந்திய கேரளா; ஒரே நாளில் கொரோனாவால் இத்தனை பேர் பாதிப்பா!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தை முந்திய கேரளா; ஒரே நாளில் கொரோனாவால் இத்தனை பேர் பாதிப்பா!

இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டும் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இது வரை இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 11ஆயிரத்து 416 […]

Continue reading …

கன்னட இயக்குனர் விஜய் ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்!

Comments Off on கன்னட இயக்குனர் விஜய் ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்!

கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு 84 வயது ஆன நிலையில் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகம் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 0ஆந்திரா மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் விஜய் ரெட்டி. கடந்த 1953 ஆம் ஆண்டு திரைத்துறையில்நுழைந்து, பின்பு இயக்குனர் விட்டலாச்சார்யாவின் கன்னட படத்தில் உதவி இயக்குனராக வேலையை துவங்கினர். பின்னர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படத்தில் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணம்!

Comments Off on இந்தியாவில் கொரோனாவில் இருந்து 59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணம்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,07,415 பேர் உயிரிழந்துள்ளனர், 59 லட்சத்து 88 ஆயிரத்து 822 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 8,83,185 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 85.81 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.54 […]

Continue reading …

வடகிழக்கு மாநிலத்தை விட்டு வைக்காத பூகம்பம்; மிசோரமில் 3.6 ரிக்டர் பதிவு!

Comments Off on வடகிழக்கு மாநிலத்தை விட்டு வைக்காத பூகம்பம்; மிசோரமில் 3.6 ரிக்டர் பதிவு!

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் இன்று காலை பூகம்பம் ஏற்பட்டு உள்ளது. இதன் ரிக்டர் அளவு 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தவாங் நகரில் நேற்று காலை 8.21 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.0 ரிக்டர் பதிவாகி உள்ளது. இதை போல மணிப்பூர் மாநிலத்தின் காம்ஜோங் பகுதியில் நேற்று அதிகாலை 3.12 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் […]

Continue reading …

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்!

Comments Off on ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் அடிக்கடி பயங்கரவாதிகளும் மற்றும் பாகிஸ்தான் சேர்ந்தவர்களும் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைவதும் மற்றும் தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் முயற்சியை இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இருக்கும் சிங்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அந்த பகுதியை பாதுகாப்பு […]

Continue reading …

உத்திர பிரதேசத்தில் பேருந்து விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம் – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

Comments Off on உத்திர பிரதேசத்தில் பேருந்து விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம் – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பேருந்து விபத்தில் ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அவருடைய இரங்கலை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துகள் துவங்கியுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் இருந்து டெல்லிக்கு ஒரு பேருந்து […]

Continue reading …

சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு – முதல்வர் பழனிசாமி இரங்கல்!

Comments Off on சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு – முதல்வர் பழனிசாமி இரங்கல்!

சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி முதல்வரின் இரங்கல் செய்தியில்; பிரபலமான மூத்த அரசியல்வாதியும், லோக் ஜனசக்தி தலைவர் மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான திரு. ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (8.10.2020) காலமானார் […]

Continue reading …

கொரோனா விதிகளை மதிக்காமல் தொற்றறை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது – மருத்துவர் ராமதாஸ்!

Comments Off on கொரோனா விதிகளை மதிக்காமல் தொற்றறை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது – மருத்துவர் ராமதாஸ்!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிரதமர் மோடி தெரிவித்து வருக்கின்றனர். இந்நிலையில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் விதிகளை மதிக்காமல் கொரோனா வைரஸை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதைபற்றி அவரின் செய்தி […]

Continue reading …

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்!

Comments Off on மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்!

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதனை குறித்து அவருடைய பதிவில்; ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் […]

Continue reading …

இன்று காலை மூன்று மாநிலத்தில் அடுத்தடுத்து பூகம்பம் – அச்சத்தில் மக்கள்!

Comments Off on இன்று காலை மூன்று மாநிலத்தில் அடுத்தடுத்து பூகம்பம் – அச்சத்தில் மக்கள்!

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தவாங் நகரில் இன்று காலை 8.21 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.0 ரிக்டர் பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இதை போல மணிப்பூர் மாநிலத்தின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.4 ரிக்டர் பதிவாகி உள்ளது. இதையடுத்து இமாசலப் பிரதேச மாநிலத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதியில் இன்று அதிகாலை அதிகாலை […]

Continue reading …