காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விடும் இன்று டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி முன்னிலையில் நடிகை குஷ்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார். பின்பு செய்தியாளரிடம் பேசிய குஷ்பு; தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு உழைப்போம். இந்தியாவை சரியான பாதையில் கொண்டு பிரதமர் மோடி எடுத்து செல்கிறார். நான் காங்கிரஸில் இருந்த போதே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். […]
Continue reading …2021 சட்டமன்ற தேர்தல் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. இதனை ஓ.பன்னிர் செல்வம் அறிவித்தார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்பு. கடந்த சில வரமாக அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற போட்டி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்து வந்தது. இதை அடுத்து கட்சியின் செயற்குழு கூடத்தில் இருவரும் இடையே பெரும் விவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இன்று […]
Continue reading …தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அதிமுகவின் சார்பில் முதலவர் வேட்பாளர் யார்? என்கிற பதவி போட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே நிலவி வருகிறது. இந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக செயற்குழு கூட்டத்துக்கு பின்னர் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து இருந்தார். இதை அடுத்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர் செல்வம் கடந்த இரண்டு […]
Continue reading …தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி ஆர் பாலு, கே என் நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர். தற்போது தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா வைரஸ் அவரைச் இருப்பது உறுதியாகியுள்ளது. இதைப்பற்றி […]
Continue reading …நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை குறித்து அவருடைய ட்விட்டர் பதிவில்; அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். மருத்துவக் […]
Continue reading …தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு.K.அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்படுகிறார். அண்மையில் அண்ணாமலை தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Continue reading …இன்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை பற்றி அண்ணாமலை ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில்; அன்புள்ள நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் பணிவான வணக்கம். அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.- இறைமாட்சி, குறள் 382 […]
Continue reading …நடிகை மீரா மிதுன் சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். மீரா மிதுன் விஜய், சூர்யா இருவரை சர்ச்சையாக பற்றி பதிவிட்டார். இதற்கு விஜய் மாற்று சூர்யா ரசிகர்கள் மீராமீதுனை கடுமையாக திட்டி கமெண்ட்ஸ் செய்து வந்தனர். தற்போது இவர்கள் இருவரை அடுத்து சூப்பர் ரஜினிகாந்தை பற்றி பதிவிட்டுள்ளார். நேற்று இவருடைய ட்விட்டர் பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பதிவிட்டது; சினிமா வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகள் என்பது எந்த […]
Continue reading …நடிகையாகவும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் குஷ்பு இருந்து வருகிறார். தற்போது சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருவதால் அவர் மீது குற்றச்சாட்டு கிளம்பி வருகிறது. இதனால் குஷ்புவின் மீது தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குஷ்புவின் முதலில் புதிய கல்விக் கொள்கையை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதன் பின்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் விரைவில் குணமாக வேண்டும் […]
Continue reading …சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைத்தார். டெல்லியில் உள்ள ஜே.பி. நட்டா இல்லத்தில் சந்தித்து பேசி கு.க. செல்வம் பாஜகவில் இணைந்தார். கு.க. செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து இருக்கிறார். மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்காததால் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
Continue reading …