
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மேலும், இரண்டு தீவிரவாதிகளை சுட்டு கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்கள். இதனால் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு. நேற்று மாலை பந்தா சோவ்க் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவலர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அந்த நேரத்தில், திவரவாதிகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் பின்பு இன்று அதிகாலை மேலும் இரண்டு திவரவாதிகள் மடிந்தனர். இந்த மோதலில் காவலர் பாபு ராம் படுகாயம் […]
Continue reading …
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு.K.அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்படுகிறார். அண்மையில் அண்ணாமலை தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 87 பேர் பலியாகியுள்ளனர், 6,045 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,15,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,137 பேர் பலியாகியுள்ளனர், 3,55,727 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,33,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 5,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
அமெரிக்கா மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்துவிட்டார் என துணை அதிபராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா, வாஷிங்டனில் நடந்த விழாவில் பேசிய கமலா ஹாரிஸ், கொரோனா வைரஸை பார்த்து டிரம்ப் பயந்துவிட்டார் எனவும் கொரோனா வைரசால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்யாமல் விட்டுவிட்டு பங்கு சந்தையில் கவனம் செலுத்திகிறார் என தெரிவித்தார். கொரோனா பிரச்னையில் கவனம் செலுத்தினால் அது பங்கு சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் […]
Continue reading …
“பிளாக் பேந்தர்” கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணத்தினால் நேற்று உயிரிழந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் (Chadwick Boseman) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலம் இல்லாமல் உயிரிழந்தார். அவருக்கு 43 வயது ஆகிறது. பிளாக் பேந்தர், 21 பிரிட்ஜஸ், அவஞ்சர்ஸ் இன்பினிடி வார், அவஞ்சர்ஸ் என்ட் கேம், கேப்டன் அமெரிக்கா சிவில் வார் உள்பட படங்களில் நடித்து உள்ளார். சாட்விக் நடித்ததில் பிளாக் பேந்தர், அவஞ்சர்ஸ் […]
Continue reading …
புகையிலை மற்றும் மதுவை ஒழிப்பதற்கு அனைவரும் உறுதியேற்க வேண்டும் என பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். இதனை குறித்து அவருடைய அறிக்கையில்; புற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை: புகையிலை, மதுவை ஒழிக்க வேண்டும். சென்னையில் புற்றுநோய் தாக்கம் பற்றி தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளி விபரங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. இந்தியாவில் தில்லிக்கு அடுத்த படியாக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்வது கவலையளிக்கிறது.இந்திய மருத்துவ […]
Continue reading …
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் ஒன்பது படங்களில் நடித்து வருகிறார். அதில் சில படங்களில் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி வருகிறது. இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; என்னுடைய முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் வந்துகொண்டிருக்கிறது. ஒரு கனவு எனக்கு நனவாக போகிறது. “கோல்ட்நைட்ஸ்” என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தின் முதல் சிங்கிள் செப்டம்பர் 17 அன்று […]
Continue reading …
கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலன் இன்றி உயிரிழந்தார். ஆகஸ்ட் 10ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
Continue reading …
மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் திருமலை நாயக்கர் மகாலை நடந்து வரும் வேலைகளை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு நடத்தினர். வட மாநில தொழிலாளர்கள் இல்லாததால் ஒப்பந்த தொழில்கள் முடங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதை அடுத்து வட மாநில ஊழியர்கள் இல்லாததால் ஒப்பந்தம் செய்த வணிகங்கள் முடங்கிவிட்டது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு; அமைச்சர் நான் கொரோனா வைரஸோடு வாழ பழகிவிட்டேன். இதனால் கொரோனாவை காரணம் காட்டமல் வேலைகளை துவங்க வேண்டும் என […]
Continue reading …
பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டம் துவங்கி ஆறு வருடங்கள் முடிந்ததற்கு பிரதமர் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டத்தால் பல குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அடித்தளமான பயனாளிகள் கிராமங்களில் இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டதன் மூலம் பெண்களுக்கு பயன் அளிப்பதாகும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்திற்கு சிறப்பாக உழைத்தவர்களுக்கு நன்றி எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Continue reading …