தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது பற்றி முதலமைச்சருடன் கலந்துரையாடல் செய்து இரண்டு நாட்களில் முடிவு தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியது: தமிழ்நாட்டில் பள்ளிகள் தற்போது திறப்பதற்கு வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னரே பள்ளிக்கூடங்களைத் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது பற்றி இரண்டு நாட்களுக்குள் முதலமைச்சருடன் ஆலோசனை […]
Continue reading …கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியான ராஜ் டிவியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவருக்கு கடந்த 15 நாட்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரு நாட்களாக அவருடைய உடல் நிலையில் மோசமானதால் சிகிச்சை பலனின்றி இன்று காலைகாலமானார். இவருடைய மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு க ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் தங்களுடைய இரங்கலை […]
Continue reading …சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தை ஆய்வு நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய பிரகாஷ் கூறியது: சென்னையில் மொத்தம் 54 கொரோனா வைரஸ் சிறப்பு மையத்தில் 17,500 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் 4,350 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளதாகவும் மற்றும் மீதி படுக்கைகள் காலியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் முழு […]
Continue reading …படங்களை ஓடிடி மூலம் ரிலீஸ் செய்வது சினிமா தொழிலுக்கு ஆபத்தானது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரிசோதனையில் எடுக்கப்படும் ரத்த சளி மாதிரிகளில் இருக்கும் ஆர்.என். ஏ மூலக்கூறுகளை பிரித்து எடுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் ஆய்வகதுக்கு 22 லட்சம் ரூபாய் செலவில் மாதிரிகளில் இருக்கும் ஆர்.என். ஏ மூலக்கூறுகளை பிரித்து எடுக்கும் கருவியை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆரம்பித்து வைத்தார் பிறகு நிருபர்களிடம் […]
Continue reading …உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அரசு தீவிரமாக பணிபுரிந்ததால் 85 ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடிந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தற்சார்பு வேலைவாய்ப்பு திட்ட விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியது: இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம். அம்மாநில அரசு தீவிரமாக பணிபுரிந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 85,000 உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார். உலகமே ஒரே சமயத்தில் ஒரு சிக்கலை எதிர் கொண்டு வருகிறது என்பதை எவரும் எதிர்பார்த்ததில்லை […]
Continue reading …தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒரு டாஸ்மாக் கடைக்கு இரண்டு சிசிடிவி கேமராக்கள் என்ற கணக்கில் 3ஆயிரம் டாஸ்மாக் கடைகளுக்கு 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படுகின்றன. மண்டல வாரியாக எந்த கடைக்கு கேமராக்கள் பொருத்தலாம் என்ற அறிக்கையை மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதில் எந்த கடையில் மது அதிகமாக விற்பனை, திருட்டு சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு, பிரச்சினை நடக்கிற கடைகளுக்கு கேமராக்களை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …கடந்த இரண்டு நாட்களாக பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் பெய்த கனமழையால் 110 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் பல பேர் வயல் வெளிகளில் பணிபுரிந்ததால் இடிதாக்கி […]
Continue reading …இனிமேல் தனியார் நிறுவனங்கள் ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களை தயாரிக்கலாம் என இஸ்ரோ சிவன் கூறியுள்ளார். இஸ்ரோ இணையதளம் கொண்டு பேசிய இஸ்ரோ சிவன் கூறியது: விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு பங்களிப்பிற்கு அனுமதி கொடுக்கும் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என கூறியுள்ளார். பல வருடமாக தனித்தனி பாகங்களை மட்டும் இஸ்ரோவுக்கு கொடுத்து வந்த தனியார் நிறுவனங்கள் தற்போது விண்வெளித்துறையில் இணைவதால் வேலைவாய்ப்பு பெருகும் என சிவன் கூறியுள்ளார்.
Continue reading …சோபோர் பகுதியில் இருக்கும் ஹார்ட்சிவா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்ற தகவலை கொண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் தேடும் பணியை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பாதுகாப்புப் படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இரண்டு தரப்பினரும் இடையான துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் எந்த பயங்கரவாத அமைப்பு என்பதை பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Continue reading …கொரோனா வைரஸ் காரணத்தினால் சினிமா படப்பிடிப்புகள் மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. இதனை தொடங்குவதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், நடிகர்கள் நடிப்பதற்கு தயாராக இல்லை என கூறப்படுகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக குறைந்த பின்னரே நடிக்க வருவதாக பிரபலங்கள் தெரிவிக்கின்றன என தகவல் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் நடிகை காஜல்அகர்வால் அண்மையில் மும்பையில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு பல கட்டுப்பாடுகள் கொண்டும் மற்றும் தீவிர பாதுகாப்புகப்புடனும் […]
Continue reading …